வாலாஜாபாத்தில் திமுக வேட்பாளருக்கு விசி கட்சியினர் வாக்கு சேகரிப்பு

வாலாஜாபாத்: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர சூறாவளி பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின்  உத்தரமேரூர் தொகுதி வெற்றி வேட்பாளர். க.சுந்தரை  ஆதரித்து வாலாஜாபாத் பேரூர், ஒன்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில்  அம்பேத்கர் சிலையிலிருந்து ராஜவீதி, பஜார்,  விவி கோயில் தெரு, பஸ் ஸ்டாண்ட், உள்ளிட்ட முக்கிய  வீதிகளில் கடைகள் மற்றும் வீடுகளில் துண்டுப்பிரசுரங்களை வழங்கி வாக்குகள் சேகரித்தனர். இதில்  பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய செயலாளர் ஜார்ஜ் வளவன், திருவாங்கரணை பாபு, அகரம் வசந்த், ஊத்துக்காடு திருமாதாசன்,  வழக்கறிஞர் ஐயப்பன், பழையசீவரம் அன்பரசு, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்….

Related posts

கலைஞரின் 6ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னையில் 7ம் தேதி அமைதி பேரணி: சென்னை மாவட்ட திமுக அறிவிப்பு

முதுநிலை நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களை தொலைதூர தேர்வு மையங்களுக்கு அனுப்புவதன் உள்நோக்கம் என்ன? வைகோ கண்டனம்

நீட் தேர்வை ரத்து செய்ய ராமதாஸ் வலியுறுத்தல்