வானிலை சீரானதை அடுத்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது

ஜம்மு:  ஜம்மு காஷ்மீரில் மோசமான வானிலை காரணமாக நேற்று முன்தினம் நிறுத்தப்பட்ட அமர்நாத் யாத்திரை நேற்று மீண்டும் தொடங்கியது. ஜம்மு காஷ்மீரில் பனிலிங்க தரிசனம் செய்வதற்கான அமர்நாத் யாத்திரை கடந்த 30ம் தேதி தொடங்கி நடந்து வருகின்றது. இதுவரை 1.13 லட்சம் பக்தர்கள் பனிலிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் பனிலிங்க தரிசனம் செய்யும் குகை கோயில் அருகே 8ம் தேதி கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேரை காணவில்லை. தொடர்ந்து மோசமான வானிலை நிலவியதால் பக்தர்கள் யாரும் யாத்திரையை தொடர அனுமதிக்கவில்லை. இந்நிலையில் நேற்று வானிலை சீரானதை அடுத்து அமர்நாத் யாத்திரை மீண்டும் தொடங்கியது. 4026 பேர் அடங்கிய 12வது குழு நேற்று அதிகாலை 110 வாகனங்களில் புறப்பட்டு சென்றது….

Related posts

மார்ச் மாதத்திற்குள் 5 கோடி விவசாயிகளுக்கு டிஜிட்டல் அட்டை: ஒன்றிய அரசு அறிவிப்பு

மும்பை பங்களாவை ரூ.32 கோடிக்கு விற்றார் கங்கனா

பில்லியனர் எல்லாம் அந்த காலம் உலகின் முதல் டிரில்லியனர் 2027ல் எலான் மஸ்க் ஆவார்: 2028ல் அதானி, 2033ல் அம்பானி