வாக்கு எண்ணும் மையத்தில் மருத்துவ முகாம்

 

தேனி, ஜூன் 5:தேனி நாடாளுமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கை நேற்று தேனி அருகே கொடுவிலார்பட்டியில் உள்ள வாக்கு எண்ணும் மையத்தில் நடந்தது. மைய வளாகத்தில் மாவட்ட சுகாதாரத்துறை மூலம் 108 ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டு மருத்துவக் குழுவினர் ரத்த அழுத்த பரிசோதனை மற்றும் சிறு உபாதைகளுக்கு தேவையான மருந்துகளுடன் கூடிய ஏற்பாடுகளுடன் மருத்துவ முகாமை நடத்தினர். வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வந்திருந்த அலுவலர்கள் முகவர்கள் உள்ளிட்டோரில் சிலர் தங்களுக்கு ஏற்பட்ட சிறு உபாதைகளுக்கு இம் முகாமில் மருந்துகளை வாங்கி சென்றனர்.

Related posts

சிறப்பு மக்கள் நீதிமன்றத்திற்கான காணொளி விழிப்புணர்வு பிரசார வாகனம்

அரசு கலை கல்லூரியில் மாவட்ட எஸ்பி உத்வேகம் கொரோனா தொற்றில் பெற்றோரை இழந்த குழந்தைகளுடன் கலந்தாய்வு கூட்டம்

இறப்பு பதிய பிரத்யேக மென்பொருள் பல்வேறு தோல்விக்கு பிறகு கிடைக்கும் வெற்றி தான் சிறப்பானது முயற்சி செய்தால் கிடைக்காதது எதுவும் இல்லை