வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்

சிவகங்கை, அக். 28: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது. மாவட்ட தேர்தல் அலுவலர், கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: சிவகங்கை மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியல், வெளியிடப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 01.01.2024ஐ தகுதியேற்படுத்தும் நாளாகக் கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் திருத்தங்களுக்கான சிறப்பு முகாம்கள் 04.11.2023, 05.11.2023, 18.11.2023 மற்றும் 19.11.2023 நடைபெற உள்ளது. சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி நிலை அலுவர்கள் மூலமாக நேரடியாகவும், செயலி மூலமாகவும், https://voters.eci.gov.in மற்றும் https://elections.tn.gov.in என்ற இணையத்தளங்கள் வாயிலாகவும் விண்ணப்பிக்கலாம். மேலும் 27.10.2023முதல் 09.12.2023வரையிலான நாட்களில் சிவகங்கை, தேவகோட்டை ஆகிய ஆர்டிஓ அலுவலகங்கள் மற்றும் அனைத்து தாலுகா அலுவலகங்களிலும் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Related posts

நெற்பயிர், மா, வாழை மரங்களை துவம்சம் செய்த ஒற்றை யானை வனப்பகுதிக்குள் விரட்டியடிப்பு

நுகர்பொருள் வாணிப கிடங்கில் இருந்து செல்லும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் உத்தரவு

இபிஎப்ஓ பி.ஏ., இஎஸ்ஐசி நர்சிங் அலுவலர் பணியிடங்களுக்கான யுபிஎஸ்சி எழுத்து தேர்வு