மதுராந்தகம்: அடையாளம் தெரியாத வாகனம், பைக் மீது மோதியதில் இளம்பெண் உள்பட 2 பேர், சம்பவ இடத்திலேயே இறந்தனர். கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் வேலுச்சாமி (26). சென்னையை சேர்ந்தவர் கவிநிலா (20). நேற்று அதிகாலை வேலுச்சாமி, கவிநிலாவுடன் சென்னைக்கு பைக்கில் புறப்பட்டார். சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை மதுராந்தகம் புறவழிச்சாலையில் சென்றபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம், அவர்கள் சென்ற பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். தகவலறிந்து மதுராந்தகம் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று சடலங்களை கைப்பற்றி மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரிக்கின்றனர்….