வாகன விபத்தில் போலீஸ்காரர் பலி

செய்யூர்: மதுராந்தகம் அடுத்த புதுமாம்பாக்கத்தை சேர்ந்தவர் ரவீந்திரன் (51). கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் காவல் ரோந்து வாகன காவலராக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் பணி விடுப்பு காரணமாக ரவீந்திரன் கப்பிவாக்கத்தில் உள்ள தனது உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று காலை 6 மணியளவில் அங்கிருந்து காய்கறி வாங்குவதற்காக ரவீந்திரன், தனது பைக்கில் கடப்பாக்கம் பகுதிக்கு சென்றார். அப்போது, அங்குள்ள இசிஆர் சாலையை கடப்பதற்காக சாலையோரம் நின்றிருந்தார். அந்த நேரத்தில், புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி வேகமாக வந்த கார், அவர் மீது பலமாக மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயமடைந்த ரவீந்திரனை, பொதுமக்கள் மீட்டு, செய்யூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், ரவீந்திரன் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். புகாரின்படி சூனாம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கார் டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

பருவமழை துவங்குவதற்கு முன்பாக புழல் ஏரி கால்வாய் கரையை சரிசெய்ய மக்கள் கோரிக்கை

தமிழ்நாட்டின் பாரம்பரிய நாட்டுப்புறக் கலைகளில் பயிற்சிகள் நடைபெறவுள்ளது!

தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைக்கான வாகன ஓட்டுநர் பணிநியமன ஆணைகளை வழங்கினார் அமைச்சர் மு.பெ.சாமிநாதன்