வாகனம் மோதி மூதாட்டி பலி

 

தர்மபுரி, ஏப்.29:பாலக்கோடு சிக்கதோரணபெட்டம் பகுதியைச் சேர்ந்தவர் மாதப்பன் மனைவி சென்னம்மாள் (65). இவர் சற்று மனநலம் பாதிக்கப்பட்டவர். இதற்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம், சென்னம்மாள் வீட்டில் இருந்து வெளியே சென்றார். வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. அவரை உறவினர்கள் தேடும் போது, ஒகேனக்கல்-பென்னாகரம் சாலையில் வாகனம் மோதிய நிலையில், சென்னம்மாள் உயிரிழந்த நிலையில் கிடந்தார். இந்த தகவலறிந்த ஒகேனக்கல் போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

பட்டாசு திரிகள் பறிமுதல்

2 மாதமாக மூடி கிடக்கும் நிறுவனம் சீட்டு பணம் வசூலித்து மோசடி: ஏமாந்தவர்கள் புகார் மனு

பள்ளியில் அடிப்படை வசதி வேண்டும் பெற்றோர் ஆசிரியர் கழகம் மனு