வாகனம் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஆக.20: வேப்பனஹள்ளி அருகேயுள்ள பூதிமுட்டுலு பகுதியை சேர்ந்தவர் வீரபத்திரராஜ்(60), கூலித்தொழிலாளி. இவர் கடந்த சனிக்கிழமை இரவு, தனது டூவீலரில் வேப்பனஹள்ளி – பேரிகை சாலையில் உள்ள தாபா ஓட்டல் எதிரே சென்றபோது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த வேப்பனஹள்ளி போலீசார், அவரது உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

திருக்காட்டுப்பள்ளியில் மாபெரும் பெட்டிஷன் மேளா

அரசு பள்ளி மாணவர்கள் தூய்மை திருவிழா விழிப்புணர்வு பேரணி