வாகனம் மோதி தொழிலாளி பலி

கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரி அடுத்த மேலேரி கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன்(60), கூலி தொழிலாளி. இவர் கடந்த 2 நாட்களுக்கு முன், இரவு கிட்டம்பட்டி அருகே சாலையோரம் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த சரக்கு வாகனம் இவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார், அவரது சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து, வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

சாத்தூரில் இன்று மின்தடை

திமுக ஆலோசனை கூட்டம்

சத்துணவு அமைப்பாளர்களுக்கு பயிற்சி