வழிப்பறி கொள்ளையர்கள் கைது; 40 செல்போன்கள் பறிமுதல்

திருவொற்றியூர்: மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியை சேர்ந்த கஜலட்சுமி (45), கடந்த 25ம் தேதி வாசலில் நின்று கொண்டிருந்தபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், அவரிடமிருந்து 7 சவரன் தாலி செயினை பறித்து சென்றனர். புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை பெற்று விசாரித்தனர்.அதில், காஞ்சிபுரம் சிவக்குமார் (30), திருவள்ளூர் சிபி (25) ஆகியோர், பைக் திருட்டு, செல்போன் பறிப்பதை  தொடர்ச்சியாக செய்து வந்ததும் தெரிந்தது. மேலும், இவர்களுக்கு உடந்தையாக  இருந்தஅரும்பாக்கம் முகமது நியாஸ் (30), செல்வகுமார் (எ) அப்துல்லா (34), ஜமால் (42), சையத் இப்ராகிம் (30) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 8 சவரன் தங்க நகை, 3 பைக், 40 செல்போன்களை பறிமுதல் செய்தனர்….

Related posts

அதிமுக நிர்வாகி கொலை வழக்கில் 7 பேர் கைது

கோயம்பேடு சந்தையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழைய வாகனங்களுக்கு தீ வைத்த நபர் கைது

பெங்களூருவில் இருந்து கேரளத்துக்கு 2.4 கிலோ போதைப்பொருள் கடத்தியவர் கைது