Tuesday, September 24, 2024
Home » வழக்குக்காக வந்த பெண்ணிடம் கள்ளக்காதல்: காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

வழக்குக்காக வந்த பெண்ணிடம் கள்ளக்காதல்: காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம்

by Ranjith

 

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 30 வயது பெண் ஒருவர் கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் இந்த பெண்ணுடன் திருமழிசையை சேர்ந்த கார்த்திக்(33), என்பவருக்கு பழக்கம் ஏற்பட்டு தொடர்பில் இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு வெள்ளவேடு காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் போலீஸ்காரர் ஏசுராஜ்(40) என்பவர் வந்து உள்ளார்.

அப்போது அங்கு வந்த அந்த பெண்ணின் கள்ளக்காதலன் கார்த்திக்கும், ஏசுராஜுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டனர். இதில் கார்த்திக் சரமாரியாக தாக்கியதில் காயமடைந்த போலீஸ்காரர் ஏசுராஜ் மருத்துவ விடுப்பில் சென்றுவிட்டார்.  இதையடுத்து அவர் பூந்தமல்லி போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் பூந்தமல்லி போலீசார் கார்த்திகை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திக் இந்த பெண்ணுடன் கள்ளத் தொடர்பில் இருந்து வந்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு ஒரு வழக்கில் கார்த்திக்கை வெள்ளவேடு போலீசார் கைது செய்த போது அந்த வழக்கு தொடர்பாக இந்த பெண் வெள்ளவேடு காவல் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கு பணிபுரியும் போலீஸ்காரர் ஏசுராஜுடன் அந்த பெண்ணிற்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து ஏசுராஜும் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்ததாக கூறப்படுகிறது. சம்பவம் நடந்த அன்று அந்த பெண்ணின் வீட்டிற்கு ஏசுராஜ் வந்த நிலையில் கார்த்திக்கும் வந்ததால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் இருவரும் மாறி, மாறி தாக்கி கொண்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீஸ்காரர் ஏசுராஜை ஆயுதப்படைக்கு மாற்றி ஆவடி காவல் ஆணையரக உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

You may also like

Leave a Comment

ten + 16 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi