திருவள்ளூர்: மானாமதுரை வழக்கறிஞர் முருகானந்தம், தாம்பரம் வழக்கறிஞர் ரங்கராஜன் ஆகியோர் மீது பொய் வழக்கு போடப்பட்டதை கண்டித்தும், மேட்டூர் பெண் வழக்கறிஞர் கவிதாவை கொடூரமாக தாக்கிய மேச்சேரி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், மேலும், ஓசூர் பெண் வழக்கறிஞர் அனுராதா மீது காழ்ப்புணர்ச்சியோடு மிரட்டி வரும் சிப்காட் காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற நுழைவாயலில் நீதிமன்ற வழக்கறிஞர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வழக்கறிஞர்கள் சங்க தலைவர்கள் இளவரசு, சீனிவாசன் ஆகியோர் தலைமை தாங்கினர். செயலாளர் ஜான் முன்னிலை வகித்தார். இதில் ரகுபதி, ஆரோன், அன்பு, மகேந்திரன், சிவா, அலெக்ஸ் உள்பட 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துகொண்டனர்….