வள்ளியூர் சூட்டுப்பொத்தை முத்துகிருஷ்ண சுவாமி குருபூஜையில் நாளை கிரிவல தேரோட்ட வைபவம்

வள்ளியூர்,நவ.21: வள்ளியூர் சூட்டுப்பொத்தை  முத்துகிருஷ்ண சுவாமிகள் 110வது குருபூஜையில் கிரிவல தேரோட்ட வைபவம் நாளை (22ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது. நெல்லை மாவட்டம், வள்ளியூர் சூட்டுப்பொத்தையில் ஆண்டுதோறும்  முத்துகிருஷ்ண சுவாமிகள் குருபூஜை 10 நாட்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி இந்தாண்டுக்கான 110வது குருபூஜை கடந்த 18ம் தேதி வனவிநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. இதையொட்டி முத்துக்கிருஷ்ண சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் பல்வேறு பூஜைகள் நடந்தன. குருபூஜை நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு சொற்பொழிவு, பரதநாட்டியம், பக்தி இசை, குரலிசை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கிரிவல தேரோட்ட வைபவம் நாளை (22ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு நடக்கிறது.

இதில் திரளாகப் பங்கேற்கும் பெண்கள் உள்ளிட்ட பக்தர்கள் தேரின் வடம்பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர். தேர் நிலையத்தை வந்தடைந்ததும் சிறப்பு அன்னதானம் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 23ம் தேதி குருபூஜையும், 26ம் தேதி மாலை 5 மணிக்கு மலை மீது கார்த்திகை தீபம் ஏற்றும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் (27ம் தேதி) அதிகாலை 5 மணிக்கு கிரிவலம் நடக்கிறது. இதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு குறு ஜெயந்தி ஆராதனை, திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. அனைத்து ஏற்பாடுகளையும்  முத்து கிருஷ்ண சுவாமி கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Related posts

15 ஆண்டுகளை கடந்த அரசு வாகனங்கள் பதிவுச்சான்று புதுப்பிப்பு ஓராண்டு நீட்டிப்பு தமிழக அரசு உத்தரவு

ஒருமுறை பயன்படுத்திய 76 ஆயிரம் லிட்டர் சமையல் எண்ணெய் பயோ டீசலாக மாற்றம் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தகவல்

பெண் டாக்டரிடம் ₹1 லட்சம் மோசடி பேர்ணாம்பட்டு போலீஸ் நிலையத்தில் புகார் பார்சலில் தடை செய்யப்பட்டுள்ள பொருள் அனுப்பியதாக கூறி