சென்னை: வள்ளலாரின் 200வது அவதார ஆண்டை முப்பெரும் விழாவாக நடத்த தமிழக அரசு வெளியிட்ட அரசாணைக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி வரவேற்றுள்ளது. இது குறித்து தமிழக வாழ்வுரிமை கட்சி வெளியிட்ட அறிக்கை: நீண்ட நெடிய மரபுள்ள தமிழர் ஆன்மிகச் சிந்தனைத் தொடரில் வள்ளலார் இராமலிங்க அடிகளின் சமரச சுத்த சன்மார்க்கம் என்பது முக்கியமானது. அருளியலிலும், ஆன்மிகத்திலும் காலூன்றி நிற்கும் வள்ளலார் சிந்தனைகள் அறிவியல், அரசியல், மருத்துவம், உணவியல், வாழ்வியல் போன்ற பல துறைகள் சார்ந்து விரிந்து நிற்கின்றன.வள்ளலார் பெருமானாரின் 200 வது அவதார ஆண்டு முப்பெரும் விழா நடத்த சிறப்பு குழு அமைத்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டிருப்பது வரவேற்கதக்கது….