Sunday, June 30, 2024
Home » வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தூத்துக்குடியிலேயே மாணவர்களுக்கு பயிற்சி கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தூத்துக்குடியிலேயே மாணவர்களுக்கு பயிற்சி கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

by Karthik Yash

தூத்துக்குடி, ஜூன் 9: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களுக்கேற்ப தூத்துக்குடியிலேயே மாணவர்களுக்கு பயிற்சி கிடைத்துவிடும் என கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்தார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் நேற்று மாநிலம் முழுவதும் 22 அரசு ஐடிஐகளில் ரூ.762.30 கோடி மதிப்பீட்டில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பில் டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிதாக கட்டி முடிக்கப்பட்ட 4.O தொழில்நுட்ப மையங்களை காணொலி காட்சி மூலம் முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்றுதிறந்து வைத்தார். அந்தவகையில் தூத்துக்குடி, கோரம்பள்ளம் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் அமைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தையும் முதல்வர் திறந்துவைத்தார்.

இதையொட்டி கோரம்பள்ளம் அரசு ஐடிஐயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல்வரால் திறந்துவைக்கப்பட்ட தொழில்நுட்ப மையத்தை பார்வையிட்டு கூறியதாவது:மாநிலம் முழுவதும் இருக்கின்ற 71 அரசு ஐடிஐ களில் புதிதாக தொழில் 4.0 ஆரம்பிக்க திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 21 தொழில்பயிற்சி மையங்களில் தொழில் வளாகத்தை முதல்வர் துவக்கிவைத்துள்ளார். இதுவரை அரசு தொழிற்பயிற்சி மையங்களில் இல்லாத அளவுக்கு 5 டிரேடுகளில் நீண்ட கால பயிற்சியும், 23 டிரேடுகளில் குறுகிய கால பயிற்சியும் அளிக்க இருக்கிறார்கள் நவீன தொழில்நுட்பங்களான ரோபோட்டிக்ஸ், 3டி பிரிண்டிங், மின் வாகனங்கள் மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்கட்டமாக கோரம்பள்ளம்அரசு ஐடிஐயில் 4.0 தொழில் வளாகம் நிறுவப்பட்டு நிறைய உபகரணங்கள் வைக்கப்பட்டுள்ளன.

தற்போதைய காலகட்டத்தில் கார் தயாரிப்பு தொழிற்சாலைகளில் ரோபோட்டிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. தூத்துக்குடிஅரசு ஐடிஐயில் படித்த மாணவர்கள் வேலை தேடி பெரிய நிறுவனங்களுக்கு செல்லும்போது அங்குள்ள புதிய தொழில்நுட்பங்களை படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்கள். இன்றைய தினம் முதல் நிறுவனங்களுக்கு தேவையான தொழில்நுட்பங்கள் எல்லாம் தொழில் 4.O மூலம் தூத்துக்குடிஅரசு ஐடிஐயிலேயே உள்ளது. அதேபோல் நாகலாபுரம், வேப்பலோடை, திருச்செந்தூர்அரசு ஐடிஐங்களிலும் கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. விரைவிலேயே அந்த தொழில்பயிற்சி நிலையங்களுக்கும் தொழில் 4.O விரிவுப்படுத்தப்படும்’’ என்றார். நிகழ்ச்சியில் வ.உ.சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழக மேற்பார்வை பொறியாளர் வேதநாராயணன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் தம்பிரான் தோழன்,அரசு ஐடிஐ துணை இயக்குநர் வேல்முருகன், மாவட்ட திறன் பயிற்சி மைய உதவி இயக்குநர் ஏஞ்சல் விஜயநிர்மலா மற்றும் அலுவலர்கள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

You may also like

Leave a Comment

seventeen − fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi