வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்தவர் சிக்கினார்

சென்னை: கீழ்ப்பாக்கம் போலீசார் நேற்று முன்தினம் மதியம் கீழ்ப்பாக்கம், ஈ.வெ.ரா சாலை மற்றும் டெய்லர்ஸ் சாலை சந்திப்பு அருகில் சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த நபரை நிறுத்தி விசாரணை செய்தனர். அதில் அவர் முன்னுக்குப் பின் முரணாக பதலளித்தார். மேலும் சந்தேகம் அதிகரிக்கவே அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது, அதில் பெருமளவு உடல்வலி நிவாரண மாத்திரைகள் மறைத்து வைத்திருந்து தெரியவந்தது. அதன்பேரில் சட்ட விரோதமாக உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த சென்னை, அரும்பாக்கம், 1வது தெருவை சேர்ந்த முனியசாமி (20) என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 525 நைட்ரவிட் மாத்திரைகள் மற்றும் 90 டைடல் மாத்திரைகள் என மொத்தம் 615 உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட முனியசாமி விசாரணைக்குப் பின்னர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்….

Related posts

மீஞ்சூர் அருகே தோட்டக்காடு பகுதியில் முன்பகை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு அரிவாள் வெட்டு

சுரண்டையில் கிரைண்டர் செயலி மூலம் வாலிபரை மிரட்டி பணம் பறித்த 9பேர் கைது

திருச்சி அருகே பயங்கரம் இரும்பு கம்பியால் அடித்து பாட்டி கொலை