Sunday, August 4, 2024
Home » வலங்கைமான் பேரூராட்சியில் சேதமடைந்து கிடக்கும் மயான கொட்டகை-புதிதாக கட்டித்தர கோரிக்கை

வலங்கைமான் பேரூராட்சியில் சேதமடைந்து கிடக்கும் மயான கொட்டகை-புதிதாக கட்டித்தர கோரிக்கை

by kannappan

வலங்கைமான் : வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் டாஸ்மாக் கடை அருகே எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி உள்ள மயான கொட்டகையை அப்புறப்படுத்திவிட்டு புதிய கட்டிடம் அமைத்து தர பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.வலங்கைமான் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. முப்பதுக்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளது. இந்நிலையில் வடக்கு அக்ரஹாரம், நடு அக்ரஹாரம். தெற்கு அக்ரஹாரம், சுப்பநாயக்கன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, குடமுருட்டி வழிநடப்பு மரப்பாலத்தெரு, உப்புக்கார தெரு மற்றும் கீழத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களது குடும்பத்தில் எதிர்பாராவிதமாக உயிரிழப்பு ஏற்பட்டால் அவர்களை அடக்கம் செய்யும்விதமாக குடமுருட்டி ஆற்றங்கரையில் டாஸ்மாக் அருகே மயான கொட்டகை உள்ளது. இந்த மயான கொட்டகை சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் தகரத்தால் ஆன கூரைகளுடன் அமைக்கப்பட்டதாகும். இவை பழுதடைந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. தற்போது அந்த மயான கொட்டகையில் அடக்கம் செய்பவர்கள் சுற்றி வருவதற்கு கூட வாய்ப்பில்லாமல் உள்ளது.மேலும் குடமுருட்டி ஆற்றங்கரையில் இருந்து மயானம் வரை உள்ள சுமார் 100 மீட்டர் பாதை மண் பாதையாகவே உள்ளது. மழைக்காலங்களில் இறந்தவர்களை இந்த மயான கொட்டகையில் அடக்கம் செய்வதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது.கடந்த அதிமுக ஆட்சியில் இக்கட்டிடத்தை புனரமைக்கும் பொருட்டும் தண்ணீர் வசதி செய்து தரவும் உரிய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இருப்பினும் அவை முறையாக செயல்படுத்தப்படாமல் கட்டிடம் கட்டப்படாமலும், தண்ணீர் வசதிக்கான போர்வெல் அமைக்கப்பட்டு அதில் பம்புகள் பொருத்தப்படாமலும் உள்ளது.எனவே இப்பகுதியில் மிகவும் பழுதடைந்து அடிப்படை வசதியின்றி உள்ள மயானக் கொட்டகையை இடித்துவிட்டு புதிய மயான கொட்டகை அமைத்து தர வேண்டுமெனவும், மயான கொட்டகைக்கு அணுகு சாலை அமைத்து தரவும், தண்ணீர் வசதி செய்து தரவும் பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்….

You may also like

Leave a Comment

14 − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi