Sunday, September 29, 2024
Home » வலங்கைமான் அருகே செல்போன் டவர் மீது ஏறிய போதை கட்டுமான தொழிலாளி-2 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

வலங்கைமான் அருகே செல்போன் டவர் மீது ஏறிய போதை கட்டுமான தொழிலாளி-2 மணி நேரத்திற்கு பிறகு மீட்பு

by kannappan

வலங்கைமான் : வலங்கைமான் அடுத்த உத்தாணி பகுதியில் செல்போன் டவர் மீது ஏறி நின்ற கட்டுமான தொழிலாளி 2 மணி நேரத்திற்கு பிறகு மீட்கப்பட்டார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அடுத்த தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(50).இவருக்கு மனைவி மற்றும் ஒரு மகன் மகள் உள்ளனர். செல்வகுமார் அவ்வப்போது மது அருந்துவது வழக்கம். அதனை அடுத்த சில சமயங்களில் தன்நிலை மறந்து செயல்படுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலங்கைமான் அடுத்த உத்தாணி பகுதியில் உள்ள தனியார் செல்போன் டவர் மீது நேற்று பிற்பகல்நிர்வாணத்துடன் செல்வகுமார் ஏறி நின்றுள்ளார்.வலங்கைமான் தாசில்தார் சந்தானகோபால கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர் விஜயா மற்றும் பாபநாசம் தீயணைப்பு நிலைய அலுவலர் கலைவாணன், சிறப்பு நிலை அலுவலர் இளங்கோவன் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் சிங்காரவேலன், தினேஷ், ராம்குமார், தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர்.தீயணைப்பு நிலையத்தினர் செல்போன் டவர் மீது ஏறியபோது, செல்வகுமார் கிடுகிடுவென மேலே சென்று உள்ளார்.அதனையடுத்து செல்வகுமாரின் மகனை சம்பவ இடத்திற்கு அழைத்து வந்து தந்தையுடன் ஒலிப்பெருக்கி மூலம் பேச செய்தனர். அதனை அடுத்து செல்வகுமார் 2 மணி நேர இடைவேளைக்கு பிறகு கீழே இறங்கினார். இச்சம்பவம் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது….

You may also like

Leave a Comment

16 + thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi