தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை மார்வாடி தெருவில் உள்ள வீரமா காளியம்மன் கோவிலில். சௌபாக்கியவராகி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா நடைபெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து வராகி அம்மனுக்கு தினமும் பல்வேறு வகையான திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று தீபாராதனை நடைபெற்று வருகிறது. வராகி அம்மனுக்கு ஞாயிற்றுக்கிழமை இனிப்பு அலங்காரம், திங்கட்கிழமை மஞ்சள் அலங்காரமும், 20ம்தேதி குங்குமம் அலங்காரமும், 21ம் தேதி சந்தன அலங்காரமும் , 22ம் தேதி தேங்காய் பூ அலங்காரம், 23ம் தேதி மாதுளை முத்து அலங்காரமும், 24ம் தேதி நவதானிய அலங்காரமும், 25ம் மாவு காப்பு அலங்காரமும், நேற்று பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டது.