மவுன்ட் மவுங்கானுயி: நியூசிலாந்தை முதல் முறையாக அதன் சொந்த மண்ணில் வீழத்தி வங்கதேச அணி வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. பே ஓவல் மைதானத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கிய முதல் டெஸ்டில் டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீசிய நிலையில், நியூசி. முதல் இன்னிங்சில் 328 ரன் குவித்தது. அடுத்து களமிறங்கிய வங்கதேசம் 458 ரன் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து 130 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய நியூசி. 4ம் நாள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 147 ரன் எடுத்திருந்தது. நேற்று நடந்த கடைசி நாள் ஆட்டத்தில் அந்த அணி மேற்கொண்டு 22 ரன் மட்டுமே சேர்த்து எஞ்சிய 5 விக்கெட்டையும் பறிகொடுத்து 169 ரன்னுக்கு சுருண்டது (73.4 ஓவர்). 4 பேர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த வேக்னர் 17 பந்துகளை சந்தித்தும் ஒரு ரன் கூட எடுக்காதது குறிப்பிடத்தக்கது. வங்கதேசம் தரப்பில் எபாதத் உசைன் 6 விக்கெட், தஸ்கின் 3, மெகிதி மிராஸ் 1 விக்கெட் எடுத்தனர். 40 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 16.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 42 ரன் எடுத்து வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை வசப்படுத்தி சாதனை படைத்தது.எபாதத் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். வங்கதேசம் 1-0 என முன்னிலை வகிக்க, 2வது டெஸ்ட் ஜன.9ம் தேதி கிறைஸ்ட்சர்ச்சில் தொடங்குகிறது.நியூசி. ஆதிக்கத்துக்கு ஆப்பு!* நியூசி. மண்ணில் விளையாடிய 9 டெஸ்ட், 16 ஒருநாள், 15 டி20 போட்டிகளில் ஒரு வெற்றியைக் கூட பெற முடியாமல் தவித்து வந்த வங்கதேசம், முதல் முறையாக வென்று சாதனை படைத்துள்ளது. * ஆசியாவுக்கு வெளியே வங்கதேசம் பெற்ற முதல் டெஸ்ட் வெற்றி இது.* கடந்த 10 ஆண்டுகளில் நியூசி.யை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தும் முதல் ஆசிய அணி என்ற சாதனையும் வங்கதேசத்துக்கு சொந்தமாகி உள்ளது.* கடைசியாக 2010/11ல் நியூசிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரை (2 போட்டி) பாகிஸ்தான் 1-0 என்ற கணக்கில் வசப்படுத்தி இருந்தது. * வங்கதேசம் வெளிநாடுகளில் பெறும் 6வது டெஸ்ட் வெற்றி இது. * செனா (SENA) நாடுகள் என்றழைக்கப்படும் தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளுடன் இதற்கு முன் 22 டெஸ்ட்களில் விளையாடி தோற்றுள்ளது. அதில் 15 டெஸ்ட்களில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்துள்ளது.* சொந்த மண்ணில் தொடர்ந்து 17 டெஸ்ட்களில் தோல்வியையே சந்திக்காத நியூசிலாந்தின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளது.சிறப்புக் குழந்தைகள் அசத்தல்சென்னை நேரு ஸ்டேடியத்தில் சங்கமித்ரா அறக்கட்டளை சார்பில் நேற்று நடந்த சிறப்புக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டியில் 250 சிறுவர், சிறுமிகள் பல்வேறு பிரிவுகளில் பங்கேற்று திறமையை வெளிப்படுத்தினர். வெற்றி பெற்றவர்களுக்கு விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பதக்கம், சான்றிதழ்களை அளித்து வாழ்த்தினார். உடன் எஸ்டிஏடி பொது மேலாளர் முருகன் ராமமூர்த்தி, சங்க நிர்வாகிகள்….
வரலாறு படைத்தது வங்கதேசம்
previous post