Sunday, October 6, 2024
Home » வரலாறு காணாத விலை குறைவு செடியிலேயே காயும் கனகாம்பரம்-பறிக்க விவசாயிகள் தயக்கம்

வரலாறு காணாத விலை குறைவு செடியிலேயே காயும் கனகாம்பரம்-பறிக்க விவசாயிகள் தயக்கம்

by kannappan

நிலக்கோட்டை : நிலக்கோட்டை பகுதியில் கனகாம்பரம் பூ உற்பத்தி அதிகரித்துள்ளது. எனினும் சுபமுகூர்த்த தினங்கள், விஷேச தினங்கள் இல்லாததால் வரலாறு காணாத விலை குறைவு காரணமாக பூக்களை செடியிலே விவசாயிகள் விட்டுள்ளனர்.நிலக்கோட்டை சுற்றிய செம்மண் பாங்கான ஒட்டுப்பட்டி, அவையம்பட்டி, பாலம்பட்டி, கொடைரோடு, பள்ளப்பட்டி, நூத்தலாபுரம், பங்களாப்பட்டி ஆகிய பகுதிகளில் இந்த ஆண்டு பரவலாக மழை பெய்தது. இதையடுத்து விவசாயிகள் ஆர்வமுடன் கனகாம்பரம் பூ விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த மாதத்திற்கு முன்புவரை ரூ.1500 முதல் 2200 வரை விற்பனையான கனகாம்பரம் இந்த மாதம் சுபமுகூர்த்த தினங்கள் மற்றும் விசேஷ நாட்கள் இல்லாததால் தொடர் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. நேற்று நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் வெறும் ரூ.80 முதல் 100 வரை மட்டுமே விலைபோனது.  மேலும் இந்த கனகாம்பரம் பூக்களை பதப்படுத்தியோ, பாதுகாத்தோ வைத்து வெகு தொலைவிற்கு கொண்டு சென்று விற்பனை செய்ய முடியாது. பறிக்கும் பூக்களை அன்றே விற்பனை செய்ய வேண்டும். எனவே விவசாயிகளுக்கு போதிய விலை கிடைக்காததாலும் எடுக்கும் கூலிக்கு கூட கட்டுப்படியாகாது என்பதாலும் கனகாம்பரம் பூக்களை பறிக்காமல் செடியிலேயே விட்டுள்ளனர். பறித்துச்சென்ற பூக்களும் போதிய விலை கிடைக்காமல் நிலக்கோட்டை மார்க்கெட்டில் குவியல் குவியலாக குவித்து வைக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

20 + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi