Tuesday, September 17, 2024
Home » வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள்

by Neethimaan

ஊட்டி, ஆக. 1: ேகரளாவின் வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். இதில் நீலகிரி மாவட்டம், நெல்லியாளம் நகர 14வது வார்டு கழக திமுக துணை செயலாளர் காளிதாசன் என்பவரும் உயிரிழந்தார். அவரின் உடல் இடிபாடுகளிலிருந்து மீட்கப்பட்டு மரப்பாலம் கொண்டு வரப்பட்டது. நீலகிரி மாவட்ட திமுக சார்பில், மாவட்ட திமுக செயலாளர் முபாரக், கட்சியினருடன் நேரில் சென்று கழக கொடி போர்த்தி, மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தி, காளிதாசன் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர் ரவிகுமார், மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, காசிலிங்கம்,

நெல்லியாளம் நகர செயலாளர் சேகரன், ஒன்றிய கழக செயலாளர்கள் சிவானந்தராஜா, சுஜேஷ், தலைமை கழக சொற்பொழிவாளர் பாண்டியராஜ், தலைமை பொதுக்குழு உறுப்பினர் சதக்கத்துல்லா, நகராட்சி தலைவர்கள் சிவகாமி, பரிமளா, கூடலூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் கீர்த்தனா, மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலன், அன்வர்அப்துல்லா, இளைஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் முரளிதரன் உட்பட கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கழக முன்னணியினர் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

You may also like

Leave a Comment

two × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi