Tuesday, September 17, 2024
Home » வனப்பகுதியை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம்; இன்று முதல் அமல்

வனப்பகுதியை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை கொடுத்து ரூ.10 திரும்ப பெறும் திட்டம்; இன்று முதல் அமல்

by kannappan

வேலூர்: வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை லேபிளுடன் வழங்கினால் ரூ.10 திரும்ப பெறும் திட்டம் இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலாகிறது. தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகள் இயங்கி வருகின்றன. இதில் 15 முதல் 25 சதவீத டாஸ்மாக் மதுபான கடைகள் மலைவாசஸ்தலங்களிலும், வனப்பகுதிகளை ஒட்டியும் அமைந்துள்ளன. பிற கடைகள் நகர்ப்பகுதிகளை தவிர்த்து, ஊருக்கு ஒதுக்குப்புறமாகவும், கிராமப்புறங்களிலும் அமைந்துள்ளன. மதுக்கடைகளில் மது வாங்கி அருந்தும் குடிமகன்கள், தாங்கள் மது அருந்தும் இடங்களிலேயே மது பாட்டிலை உடைத்தோ அல்லது அப்படியே வீசியோ செல்கின்றனர்.இதனால் வனப்பகுதிகளில் வனவிலங்குகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகின்றன. அதேபோல் வனப்பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளும் சேர்ந்து வனவிலங்குகளை பாதிக்கின்றன. கிராமப்புறங்களில் வயல்வெளிகளில் வீசப்படும் மது பாட்டில்களால் பொதுமக்கள் காயமடைவதும், விவசாய நிலங்கள் பாதிப்படைவதும் தொடர்கிறது. இதை கருத்தில் கொண்டு டாஸ்மாக் நிர்வாகம் புதுமையான ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி குடிமகன்கள் வாங்கும் மது பாட்டிலுடன் ரூ.10 சேர்த்து வசூலிக்கப்படும். மது அருந்திய பின்னர் காலி பாட்டிலை அதன் எக்சைஸ் வரி லேபிள் கொண்ட மூடியுடன் திருப்பித் தந்தால் ரூ.10 திருப்பி வழங்கப்படும். பாட்டிலை திருப்பித்தராத நிலையில் குடிமகனிடம் வசூலிக்கப்பட்ட ரூ.10 டாஸ்மாக் வங்கி கணக்கில் சேர்க்கப்படும். அதேபோல் வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள பார்களில் குடிமகன்களால் காலியாகும் மதுபாட்டில்களை பார் நடத்துனர்கள் எடுத்துக்கொண்டு, அதில் ஒட்டப்பட்டுள்ள எக்சைஸ் ஸ்டிக்கர் தனியாக எடுத்து டாஸ்மாக் பணியாளரிடம் கொடுத்தால் அவர்களுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.10 வழங்கப்படும். இதனால் பாட்டில்கள் வனப்பகுதிகளிலும், மலைவாசஸ்தலங்களிலும் உடைக்கப்படுவதும், வீசப்படுவதும் குறைந்துவிடும். சோதனை முறையில் ஒரு மாவட்டத்தில் நல்ல வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிர்வாகம் முடிவு செய்தது. இந்நடைமுறை இன்று தமிழகம் முழுவதும் உள்ள மலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் செயல்பாட்டுக்கு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்காக சேலம் டாஸ்மாக் மண்டலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், திருவண்ணாமலை மாவட்ட மேலாளர்களை அழைத்து ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மலை மற்றும் வனப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. இம்மாவட்டங்களை சேர்ந்த மேலாளர்களிடம் அந்தந்த மாவட்ட பெயர்கள் அச்சடித்த ஸ்டிக்கர்கள் வழங்கப்பட்டுள்ளன. இவை அங்குள்ள மலை மற்றும் வனப்பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடைகளுக்கு மதுபாட்டில் அனுப்பி வைக்கப்படும்போது அதனுடன் ஸ்டிக்கர் ஒட்டி அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது….

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi