வனசரக அலுவலருக்கு பிரிவு உபசார விழா

தேன்கனிக்கோட்டை, ஜூன் 2: அஞ்செட்டி வனசரக அலுவலராக பணிபுரிந்து வந்த முருகேசன் மற்றும் வனகாவலர் முனிகிருஷ்ணன் ஆகியோர் நேற்று பணி ஓய்வு பெற்றனர். இவர்களுக்கு பிரிவு உபசார விழா நேற்று அஞ்செட்டி வனத்துறை ஓய்வு விடுதியில் நடைபெற்றது. விழாவிற்கு ஓசூர் வனகோட்ட வன உயிரின காப்பாளர் கார்த்திகேயனி தலைமை தாங்கி நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். விழாவில் வனத்துறை அலுவலர்கள், ஓய்வு பெற்றவர்களை வாழ்த்தி பேசினர். தேன்கனிக்கோட்டை, ஓசூர், ராயக்கோட்டை, உரிகம், ஜவளகிரி வனசகர அலுவலர்கள், வனவர்கள், வனகாப்பாளர்கள், வனகாவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், ஓய்வுபெற்ற வனத்துறையினர், மழைவாழ் மக்கள் சங்க தலைவர்கள், விவசாய சங்க தலைவர்கள், ஊர் பொதுமக்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Related posts

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த புதிய முப்பெரும் சட்டங்களை திரும்பபெற வலியுறுத்தி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கரூர் அரசு கல்லூரியில் 3ம் கட்ட கலந்தாய்வில் 131 மாணவர்கள் சேர்க்கை

மக்கள்குறைதீர் கூட்டத்தில் 548 மனுக்கள் மாயனூரில் இருந்து தென்கரை வாய்க்காலில் பாசனத்திற்கு திறந்து விடப்பட்ட தண்ணீரில் சாயக்கழிவுநீர் கலப்பா?