வத்திராயிருப்பில் டிராக்டர் மீது டூவீலர் மோதி மாணவி பலி

வத்திராயிருப்பு, ஜன. 1: வத்திராயிருப்பில் டிராக்டர் மீது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானதில் பள்ளி மாணவி பலியானார். விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பை சேர்ந்தவர்கள் மகாலட்சுமி (16), மணிபாரதி (16). பிளஸ் 1 மாணவிகளான இருவரும் நேற்றுமுன் தினம் டூவீலரில் தாணிப்பாறை – வத்திராயிருப்பு சாலையில் சென்றனர். டூவீலரை மாணவி மகாலட்சுமி ஓட்டினார்.

ஆகாசம்பட்டி பகுதியில் சென்ற போது, சாலையோரம் நினைறிருந்த டிராக்டர் மீது டூவீலர் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மாணவிகள் இருவரும் படுகாயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் இருவரையும் மீட்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். முதலுதவி சிகிச்சைக்கு பின் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகாலட்சுமி சிகிச்சை பலனின்றி நேற்று முன் தினம் இறந்தார். இதுகுறித்து வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஆசிரியர்கள் கலந்தாய்வுக்கு எதிராக நடத்தும் போராட்டத்தில் பங்கேற்க மாட்டோம் பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு அறிவிப்பு

கஞ்சா விற்றவர் கைது

முப்பெரும் சட்டங்களை அமல்படுத்த எதிர்ப்பு திருச்சியில் வக்கீல்கள் ஆர்ப்பாட்டம்