வத்தலக்குண்டு அருகே கிணற்றில் ஆண் சடலம் மீட்பு

 

வத்தலக்குண்டு, ஆக. 5: வத்தலக்குண்டு அருகே ஆடுசாபட்டி கிராமம் உள்ளது. அங்குள்ள முனியாண்டி கோயில் அருகேயுள்ள தனியார் தோட்டக் கிணற்றிகல் ஆடையில்லாத நிலையில் ஆண் சடலம் மிதந்தது. அதனை பார்த்தவர்கள் வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். வத்தலக்குண்டு இன்ஸ்பக்டர் சிலைமலை, எஸ்ஐ சேக் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கிணற்றில் பிணமாக மிதந்தவர் யாரென்றும், எவ்வாறு அவர் இறந்தாரென்றும் தீவிர விசாரணை செய்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது