வத்தலக்குண்டு, செப். 17: வத்தலக்குண்டுவில் இருந்து ஆடு சாபட்டிக்கு ரூ.1 கோடியே 50 லட்சத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடந்தது. பேரூராட்சி தலைவர் சிதம்பரம் தலைமை வகித்தார். செயல் அலுவலர் ராஜேந்திரன், துணை தலைவர் தர்மலிங்கம், திமுக நகர செயலாளர் சின்னத்துரை முன்னிலை வைத்தனர். பேரூராட்சிகளின் துணை இயக்குனர் மனோரஞ்சிதம் சாலை பணியை துவக்கி வைத்தார். இதில் பேரூராட்சி கவுன்சிலர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். தலைமை எழுத்தர் செல்லப்பாண்டி நன்றி கூறினார்.
வத்தலக்குண்டுவில் ரூ.1.50 கோடி செலவில் சாலை பணி துவக்கம்
previous post