வத்தலக்குண்டுவில் தக்காளி கிலோ ரூ.70க்கு விற்பனை: வரத்து கூடியதால் விலை குறைந்தது

 

வத்தலக்குண்டு, ஆக.4: வத்தலக்குண்டுவை சுற்றிய கிராமங்களில் தக்காளி விவசாயம் தீவிரமாக நடந்து வருகிறது. நேற்று கிராமப் பகுதிகளில் இருந்து அதிக அளவில் தக்காளி வத்தலக்குண்டு மார்க்கெட்டுக்கு வந்ததாலும், ஆடி 18க்கு ஏராளமானோர் வெளியூர்களில் உள்ள கோவில்களுக்கு சென்றதாலும்

முதல் நாள் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்ற தக்காளி ஒரே நாளில் ரூ.50 குறைந்து ஒரு கிலோ ரூ70க்கு விற்பனையானது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பல நாளாக தக்காளி வாங்க முடியாத நிலையில் இருந்த ஏராளமானோர் நேற்று தக்காளி வாங்கி ஆடி 18 நல்ல நாளை சிறப்பாக கொண்டாடினர்.

Related posts

கொள்ளிடம் பகுதியில் 500 ஏக்கரில் சாகுபடி: மா பயிர்களுக்கு நீர்பாய்ச்சுதல், உரமிடுதல் வேளாண்துறை தொழில்நுட்ப ஆலோசனை

ஒன்றிய அரசின் சட்ட திருத்தங்களை வாபஸ் பெறக்கோரி

அரியலூரில் அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் அரியலூர் மாவட்டத்தில் பழத்தோட்டத்தில் பசுந்தீவனம் சாகுபடி விருப்பம் உள்ள விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டுகோள்