Thursday, July 4, 2024
Home » வதந்தியை நம்பாதீர்!: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை..அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!!

வதந்தியை நம்பாதீர்!: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை..அமைச்சர் சிவசங்கர் விளக்கம்..!!

by kannappan

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பயணசீட்டு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று போக்குவரத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருக்கிறார். இதுகுறித்து பேசிய அவர், அரசு பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயாராகி உள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன. கட்டண உயர்வு அட்டவணை தயாராகி விட்டதாக உலவி வரும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம்; அவ்வாறு அட்டவணை ஏதும் தயாராகவில்லை என தெரிவித்துள்ளார். போக்குவரத்துத் கழகங்கள் நிதி நெருக்கடியில் இருந்தாலும் ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் செயல்பட முதலமைச்சர் அறிவுறுத்தி இருக்கிறார். டீசல் விலை ஒவ்வொரு நாளும் ஒன்றிய அரசினால் தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருவது அனைவரும் அறிந்த ஒன்று. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் நம்முடைய மாநில முதலமைச்சர் கட்டண உயர்வு குறித்து எங்களுக்கு இதுவரை எந்த ஒரு அறிவுரையும் வழங்கவில்லை. ஏழை, எளிய மக்கள் பாதிக்காத வகையில் அரசு பேருந்துகள் இயக்கப்படும் சூழலில் கட்டண உயர்வு என்ற தவறான செய்தி பரப்பப்படுகிறது. பேருந்துகளில் பெண்கள், சிறுவர்கள் மற்றும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது என்று அமைச்சர் சிவசங்கர் குறிப்பிட்டார். …

You may also like

Leave a Comment

one × 2 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi