சென்னை: சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. உயிரியல் பூங்காவின் சஃபாரி பிரிவில் சிங்கம் ஒன்று பசியின்றி இருந்ததுடன் இருமியது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக பூங்காவில் உள்ள 11 சிங்கங்களின் சளி மாதிரிகள் போபாலுக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. பரிசோதனை முடிவில் 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருப்பதாக பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது. …