வட்டார குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம்

 

காங்கயம், ஜூலை 6: காங்கயத்தில் வட்டார அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழு கூட்டம் நடந்தது. காங்கயம் பிடிஓ அலுவலத்தில் நடந்த கூட்டத்திற்கு, ஒன்றிய சேர்மன் மகேஷ்குமார் தலைமை தாங்கினார். பிடிஓக்கள் அனுராதா, விந்தியா முன்னிலை வகித்தனர். மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக ஆலோசகர் பரிமளா, டாக்டர் பாலசந்திரன் பேசினர். கூட்டத்தில், குழந்தைகள் பாதுகாப்பு, பள்ளி செல்ல கூடிய குழந்தைகள், குழந்தை திருமணம், பாலியல் குற்றங்கள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. வட்டார கல்வி அலுவலர், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் உட்பட பலர் பங்கேற்றனர்

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்