கரூர், டிச.22: மாநகரக பகுதிகளில் தாழ்வான வடிகால்கள் தரம் உயர்த்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கரூர் மாநகராட்சிக்குட்பட்ட தாந்தோணிமலை மற்றும் சணப்பிரட்டி போன்ற பல்வேறு பகுதிகளில் உள்ள சில இடங்களில் செல்லும் வடிகால்கள் மிகவும் தரையோடு தரையாக உள்ளது. இதன் காரணமாக மழைக்காலங்களில் மழைநீர், கழிவு நீருடன் சேர்ந்து கொண்டு குடியிருப்பு பகுதிகளுக்குள் சென்று பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. எனவே இதுபோன்ற பகுதிகளை விரைந்து மேம்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.