வடமாநில தொழிலாளி மாயம்

 

ஈரோடு ஜூன் 29: பீகார் மாநிலம், சம்பரன் மாவட்டம், ரகுநாதபூர் பகுதியைச் சேர்ந்தவர் ரஸ்த்தம் அன்சாரி (22). இவர் கடந்த 2 வருடங்களாக ஈரோடு மாவட்டம், திருவாச்சி அருகே உள்ள சோளிபாளையத்தில் உள்ள கால்நடை தீவன தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் கடந்த 2ம் தேதி பொருள்கள் வாங்கி வருவதற்காக வெளியில் சென்றவர் அதன் பின் திரும்பி வரவில்லை. தொடர்ந்து 3ம் தேதி தன்னுடன் வேலை பார்க்கும் மகேஷ் குமார் (27) என்பவரை தொடர்பு கொண்டு தான் ஊருக்கு சென்று வருவதாகவும், அதற்காக பணம் ரூ.5,000 அனுப்புமாறும் ரஸ்தம்குமார் கூறியுள்ளார்.

இதையடுத்து மகேஷ்குமாரும் அவருக்கு பணம் அனுப்பிவிட்டு அவர் ஊருக்கு சென்று விட்டதாக நினைத்துக் கொண்டு இருந்து விட்டார். இந்நிலையில் ரஸ்த்தம் அன்சாரியின் தந்தை, மகேஷ் குமாரை தொடர்பு கொண்டு தனது மகனின் செல்போன் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து ரஸ்த்தம் அன்சாரி மாயமானதை உணர்ந்த மகேஷ் குமார் பெருந்துறை போலீசில் நேற்று முன்தினம் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான ரஸ்த்தம் அன்சாரியை தேடி வருகின்றனர்.

Related posts

கள் விற்பனைக்கு அனுமதி கோரி ஆர்ப்பாட்டம்

பாலமலை அடிவாரத்தில் கள்ளச்சாராயம் விற்றவர் கைது

திருவேற்காடு எஸ்.ஏ. கல்லூரியில் போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு