வடமதுரை மக்கள் அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

ஒட்டன்சத்திரம், செப். 7: வடமதுரை பேரூராட்சி 13வது வார்டு சித்தூர் திடீர் நகரில் அமைந்துள்ள வழிகாட்டி விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி ஏற்பாடு செய்தார். இதற்காக வடமதுரை திமுக நகர செயலாளர் கணேசன் தலைமையில் கோயில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் ஒட்டன்சத்திரம் முகாம் அலுவலகத்திற்கு வந்து அமைச்சர் அர.சக்கரபாணி கும்ப மரியாதை செய்தனர். இந்நிகழ்வில் ஒன்றிய செயலாளர் சுப்பையன், வார்டு கவுன்சிலர் சவுந்தர்ராஜ், துணை செயலாளர் வீரமணி, கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related posts

தூய்மை பணியாளர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

திருவாடானை அருகே புதிய ரேஷன் கடை கட்டுமானப் பணி ஸ்பீடு

செப்.11ல் மக்கள் தொடர்பு முகாம்