வடமதுரை அருகே டூவீலர் மோதியதில் வாக்கிங் சென்ற இருவர் காயம்

வடமதுரை, ஜூலை 10: வடமதுரை அருகேயுள்ள பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பாலமுருகன் (42). இவர் நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (44) என்பவருடன் பில்லமநாயக்கன்பட்டி டிரான்ஸ்பார்மர் அருகே வாக்கிங் சென்று கொண்டிருந்தார். அப்போது பில்லமநாயக்கன்பட்டியை சேர்ந்த பிரபாகரன் (33) என்பவர் ஓட்டி வந்த டூவீலர் அவர்கள் மீது மோதியது. இதில் பாலமுருகன், செல்வராஜ் காயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பாலமுருகன் அளித்த புகாரின் பேரில் வடமதுரை எஸ்ஐ முருகேசன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related posts

ராஜபாளையம் காவல்துறை சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

முட்புதர்களாக காட்சியளிக்கும் அர்ச்சுனா ஆற்றை தூர்வார வேண்டும்: மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை

வெம்பக்கோட்டை அருகே ஆக்கிரமிப்புகள் அகற்றம்