வடமதுரை அருகே சரக்கு தர மறுத்தவர் மீது சரமாரி தாக்குதல்: ஒருவர் கைது

வடமதுரை, ஜூலை 28: வடமதுரை அருகேயுள்ள தென்னம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் சேகர் (27). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தென்னம்பட்டி டாஸ்மாக் கடையில் மதுபாட்டில் வாங்கிவிட்டு, அந்த வழியாக வந்த ஒரு ஆட்டோவில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார். ஆட்டோவை எலப்பார்பட்டியை சேர்ந்த ஆனந்த்சுகன்(25) என்பவர் ஓட்டி வந்தார். அந்த ஆட்டோவில் சூர்யா என்பவர் அமர்ந்திருந்தார்.

அவர் சேகரிடம் வழியில் மதுபான பாட்டிலை தனக்கு தரும்படி தெரிவித்துள்ளார். இதற்கு சேகர் மறுத்துள்ளார். இதையடுத்துயடுத்து ஆட்டோவை நிறுத்திய ஆனந்த் சுகன், சூர்யா ஆகியோ் சேகரை கல்லால் சரமாரியாக தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். இதில் பலத்த காயமடைந்த சேகரை மீட்ட அக்கம்பக்கத்தினர், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதுகுறித்து சேகர் அளித்த புகாரில் குறித்து வடமதுரை எஸ்ஐ அங்கமுத்து வழக்குப்பதிந்து ஆனந்த்சுகனை கைது செய்தார். தலைமறைவாக உள்ள சூர்யாவை தேடி வருகிறார்.

Related posts

சீர் மரபினர் நல வாரியம் உறுப்பினராக சேர விண்ணப்பங்கள் வரவேற்பு

புகையிலை பொருட்களை கடத்தியவர் கைது

முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திசையன்விளையில் மின்னொளி கைப்பந்து போட்டி