வடமதுரை, ஜூலை 5: வடமதுரை அருகே போஜனம்பட்டியை சேர்ந்தவர் நாகேந்திரன்(37). இவர் வடமதுரை அருகே உள்ள ஒரு எண்ணெய் ஆலையில் வேலை பார்த்து வருகிறார். இவரும். இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த சிவா என்பவரும். சில நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த சிவாவின் உறவினர்கள் செந்தில்குமார்(35), சிவசக்திகுமார்(20), காளீஸ்வரன்(21) ஆகியோர், எண்ணெய் ஆலைக்கு சென்று நாகேந்திரனுடன் தகராறு செய்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு போஜனம்பட்டியில் மீண்டும் அவர்களுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, நாகேந்திரனுக்கு ஆதரவாகவும் சிலர் வந்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.. இதில் நாகேந்திரன் மற்றும் காளீஸ்வரன் ஆகியோர் காயமடைந்ததால், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இந்த சம்பவம் குறித்து இரு தரப்பினரும் அளித்த புகார்களின் பேரில் வடமதுரை போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து செந்தில்குமார், சிவசக்திகுமார், முருக பெருமாள், மற்றொரு செந்தில்குமார் ஆகிய நான்குபேரை கைது செய்தார்.