நாகர்கோவில், ஜன.14: நாகர்கோவில் வடசேரியில் ₹5 லட்சத்தில் சாலை பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகராட்சி 13வது வார்டு கனகமூலம் பள்ள தெருவில் ₹5 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினை மேயர் மகேஷ் நேற்று தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துணைமேயர் மேரி பிரின்சி லதா, மண்டல தலைவர் ஜவகர், கவுன்சிலர் ஆச்சியம்மாள், மாநகர துணை செயலாளர் வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.