வங்கி மேலாளர், பெண் போலீஸ் வீட்டில் நகை, பணம் கொள்ளை: சேலத்தில் பரபரப்பு

சேலம்: சேலம் கன்னங்குறிச்சி மோட்டாங்குறிச்சி தனலட்சுமி நகரை சேர்ந்தவர் மசூதா. சென்னை ஆயுதப்படையில் போலீசாக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் இம்ரான்கான் (34). சென்னையில் ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார். இம்ரான்கானின் தாய் மட்டும் வீட்டில் இருப்பார். இவர் அடிக்கடி பென்னாகரத்தில் உள்ள உறவினர்கள் வீட்டிற்கு செல்வார். அதன்படி அவர் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று காலை வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர்கள், கன்னங்குறிச்சி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உறவினர்கள் வந்து பார்த்தனர். அங்கிருந்த வெள்ளி பொருட்கள் திருடு போனது தெரியவந்தது.* அதே பகுதியை சேர்ந்தவர் ராஜா (33), கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் இந்தியன் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவரது தாய். சென்னை அம்பத்தூர் தாசில்தாராக வேலை செய்து வருகிறார். திருமணமான ராஜா, கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இன்று அதிகாலை 1.30 மணியளவில் ராஜா வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. அங்கிருந்த ரூ.55 ஆயிரம், 7.5 பவுன் நகை ஆகியவற்றை காணவில்லை. 2 வீடுகளிலும் ஒரே நபர்கள்தான் கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என கூறப்படுகிறது. இதுகுறித்து கன்னங்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்….

Related posts

2023 நவம்பர் மாதம் முதல் கடந்த 15ம் தேதி வரை ரூ.10.87 கோடி போதைப்பொருள் பறிமுதல்: அமைச்சர் தகவல்

ரூ.10 ஆயிரத்துக்கு குழந்தை விற்பனை

பைக்கில் ‘லிப்ட்’ கேட்ட வாலிபரை தாக்கி நகை, பணம், செல்போன் பறிப்பு: 4 கொள்ளையர்கள் கைது