Friday, July 5, 2024
Home » வங்கதேசத்தில் பயங்கரம் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதியது: 5 பேர் பலி, பலர் மாயம்

வங்கதேசத்தில் பயங்கரம் பயணிகள் படகு மீது சரக்கு கப்பல் மோதியது: 5 பேர் பலி, பலர் மாயம்

by kannappan

டாக்கா: வங்கதேச தலைநகர் டாக்கா அருகே ஷீதல்அக்‌ஷயா ஆற்றில் முனீஸ்கஞ்ச் நோக்கி பயணிகள் படகு நேற்று முன்தினம் சென்றது. இந்த படகில் 60க்கும் மேற்பட்டோர் பயணம் செய்தனர். படகு சென்று கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த சரக்கு கப்பல், படகு மீது மோதியது. இதில் படகு, சரக்கு கப்பலின் அடியில் சிக்கி தண்ணீரில் மூழ்கியது. இந்த சம்பவத்தில் 20க்கும் மேற்பட்டோர் ஆற்றில் நீந்தி உயிர் தப்பினர். 5 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 12க்கும் மேற்பட்டோரை காணவில்லை. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இதனிடையே படகின் மீது சரக்கு கப்பல் மோதும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. சரக்கு கப்பல் படகில் மோதுவதும், அதில் இருந்து பலர் உயிரை காப்பாற்ற ஆற்றில் குதிப்பது நெஞ்சை உலுக்குவதாக உள்ளது….

You may also like

Leave a Comment

five × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi