வேடசந்தூர், செப். 6: வேடசந்தூர் பஸ் நிலையம் முன்பாக நேற்று திமுகவின் சார்பாக வஉசியின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வேடசந்தூர் எம்எல்ஏ காந்திராஜன் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதாபார்த்திபன், வேடசந்தூர் பேரூர் செயலாளர் கார்த்திகேயன், ஒன்றிய குழு தலைவர் சௌடேஸ்வரி கோவிந்தன், மாவட்ட துணைச் செயலாளர் தாமரைச்செல்வி முருகன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர், மாவட்ட விவசாய அணி மருதபிள்ளை உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.