லோடுமேன் வீட்டில் ₹3.70 லட்சம் பறிமுதல்: பறக்கும்படை அதிகாரிகள் அதிரடி

திருச்சுழி, ஏப். 14: நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருச்சுழி, நரிக்குடி பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் இரவு, பகலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் வருமான வரி சோதனையும் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்சுழி அருகே தமிழ்பாடியில் உள்ள லோடுமேன் மாயக்கிருஷ்ணன் (43) வீட்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதற்காக பதுக்கி வைத்துள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் தேர்தல் பறக்கும் படை அதிகாரி மோகன் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வீட்டை சோதனை செய்தனர். அப்போது சோதனை செய்ததில் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.3 லட்சத்து 70ஆயிரத்தி 700 ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. இந்நிலையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வீட்டில் வைத்திருந்த ரூ. 3 லட்சத்து 70ஆயிரத்தி 700 ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து திருச்சுழி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு