லாரி மோதி வியாபாரி பலி

 

போச்சம்பள்ளி, மே 29: கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்தவர் சென்னையன்(50), பூ வியாபாரி. இவர் நேற்று காலை வழக்கம் போல் பூக்களை வாங்கிக்கொண்டு தனது டூவீலரில் பூ வியாபாரத்திற்கு சென்றார். கெரிகேப்பள்ளி கேட் பகுதியில் சென்றபோது, சாலமரத்துப்பட்டி என்ற இடத்தில், தர்மபுரியில் இருந்து ஊத்தங்கரை நோக்கி வந்த மினிலாரி, டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சென்னையன் பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய மினிலாரி டிரைவர் தப்பியோடி விட்டார். இதுகுறித்த தகவல் அறிந்த கல்லாவி போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சென்னையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

கரூர் வேளாண்.கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ராகி மாவு அரைக்கும் இயந்திரம் திறப்பு

கரூர் மாநகராட்சி பகுதிகளில் சின்டெக்ஸ் டேங்குகளை சீரமைக்க வேண்டும்

முக்கணாங்குறிச்சி செல்லும் சாலையில் கூடுதலாக வேகத்தடை அமைக்க கோரிக்கை