லாரி மோதி பெண் பலி

ஆண்டிபட்டி, ஏப். 12: மதுரை மாவட்டம், உசிலம்பட்டியை சேர்ந்தவர் பாண்டியன். இவர் மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வீட்டில் விசேஷ நிகழ்ச்சி நடத்துவதற்காக ஜாதகம் பார்ப்பதற்காக ஒரே டூவீலரில் பாண்டியன், அன்னலட்சுமி மற்றும் மகனுடன் ஆண்டிபட்டிக்கு வந்தனர். ஜாதகம் பார்த்துவிட்டு மீண்டும் உசிலம்பட்டி திரும்பிச் சென்றனர். அப்போது ஆண்டிபட்டி-தெப்பம்பட்டி சாலைப்பிரிவு அருகே பின்னால் வந்த டிப்பர் லாரி டூவீலரின் பின்புறத்தில் மோதியது. இதில் லாரி சக்கரத்தில் சிக்கி அன்னலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பாண்டியனும், அவரது மகனும் காயங்களுடன் உயிர்தப்பினர்.

Related posts

திருவெறும்பூர் அருகே மஞ்சள் காமாலைக்கு பச்சிளம் குழந்தை பலி

லால்குடி அருகே சங்கிலி கருப்பு கோயிலில் கொள்ளை முயற்சி

மக்கள் குறைதீர் கூட்டத்தில் 468 மனுக்கள் பெறப்பட்டது