லாரி மோதி சேதமடைந்த கண்காணிப்பு கேமரா: உடனடியாக சீரமைத்த போலீசார்

திருப்போரூர்: திருப்போரூர் ரவுண்டானாவில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலை அமைந்துள்ள ரவுண்டானா வளாகத்தில் பாதுகாப்பு காரணங்களுக்காக கம்பம் ஒன்றில் 3 கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. இவற்றில் ஒரு கேமரா மாமல்லபுரம் போலீஸ் டி.எஸ்.பி.அலுவலகத்தில் இருந்து கண்காணிக்கும் வகையில் இயக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் இரவு ரவுன்டானா வழியாக சென்ற லாரி ஒன்று மோதியதில் கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த கம்பம் சாய்ந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருப்போரூர் போலீசார் அங்கு வந்து சாய்ந்து கிடந்த கேமரா கம்பத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் நிமிர்த்து வைத்து, கேமரா செயல்பாட்டினை மீண்டும் தொடங்கி வைத்தனர்….

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்

திருச்சியில் வாலிபர் வெட்டி கொலை தப்பிய ரவுடியை சுட்டு பிடித்த போலீஸ்