லாரி மோதி ஒருவர் பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி நெடுஞ்சாலை, வானகரம் அருகே நேற்று சைக்கிளில் சென்று கொண்டிருந்தவர் மீது பூந்தமல்லி நோக்கி வந்த தண்ணீர் லாரி மோதியது. இதில் அந்த நபர் தடுமாறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலறிந்த கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.  மேலும் இறந்தவர் 50 வயது மதிக்கத்தக்க நபர் என்பதும், அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்பது குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் ஆனந்த்(32) என்பவரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர்….

Related posts

தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்ற இளைஞர்கள், தொழில் முனைவோர் பால் உற்பத்தியில் ஈடுபட வேண்டும்: பால் வளத்துறை அழைப்பு

புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து 10 ஆயிரம் போலீசாருக்கு பயிற்சி: கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்

மெட்ரோ ரயில் பணி காரணமாக பெரம்பூர் மார்க்கெட் அருகே 2 நாள் போக்குவரத்து மாற்றம்