லாரி மோதியதில் மாணவன் பலி 3 பேர் படுகாயம்

துரைப்பாக்கம்: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தை சேர்ந்தவர்கள் சந்திரகாந்த் (20), சிவக்குமார் (20), சசிகுமார் 20) மற்றும் ரோஹித் (20). நண்பர்களான இவர்கள் செம்மஞ்சேரியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தனர். இவர்கள் அனைவரும் நேற்று முன்தினம் இரவு ராஜிவ் காந்தி சாலையில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்றனர். அப்போது, அதிவேகமாக வந்த லாரி, அவர்கள் மீது, எதிர்பாராதவிதமாக மோதிவிட்டு நிற்காமல் அங்கிருந்து சென்றது. இதில், தூக்கி வீசப்பட்ட 4 பேரும் படுகாயமடைந்தனர். இவர்களில்,  சந்திரகாந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த 3 மாணவர்களை அப்பகுதியினர் மீட்டு உடனடியாக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி தகவல் அறிந்ததும், பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சந்திரகாந்த் சடலத்தை மீட்டு,  பிரேத பரிசோதனைக்காக, அதே மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுசம்பந்தமாக போலீசார் வழக்குபதிவு செய்து, விபத்து ஏற்படுத்திவிட்டு, தப்பி ஓடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்….

Related posts

தி.நகர் சட்டமன்ற தொகுதியில் குடிநீர் பிரச்னைக்கு விரைவில் தீர்வு: ஜெ.கருணாநிதி எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கே.என்.நேரு பதில்

தனிநபருக்கு எத்தனை பாட்டில் விற்கலாம்? மது விற்பனைக்கு விதிமுறை பணியாளர்கள் கோரிக்கை

இன்று காலை 6-9 மணி வரை அண்ணாநகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம்: காவல் துறை அறிவிப்பு