லாரி மீது கார் மோதி வாலிபர் படுகாயம்

களக்காடு, ஜூலை 22: தூத்துக்குடி ரோஸ் காலனியை சேர்ந்தவர் முடியப்பன் மகன் ஜெயராம் (57). இவர் நேற்று அதிகாலை காரில் நாகர்கோவிலில் இருந்து நெல்லைக்கு வந்தார். அவருடன் காரில் உவரியைச் சேர்ந்த சுதாகர் (33) உள்பட 3 பேரும் வந்தனர். நாங்குநேரி அருகே மறுகால்குறிச்சி விலக்கில் சென்றபோது, முன்னால் சென்ற திருவண்ணாமலை அருகே உள்ள தண்டராம்பேட்டையை சேர்ந்த பிச்சை மகன் விஜய் (30) என்பவர் ஓட்டி சென்ற லாரி சர்வீஸ் சாலையில் இருந்து திடீரென நான்குவழி சாலையில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக கார், லாரியின் பின்பகுதியில் மோதியது. இதில் காரில் பயணம் செய்த சுதாகர் படுகாயம் அடைந்தார். அவர் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து நாங்குநேரி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்