லாரி மீது கார் மோதி ரியல் எஸ்டேட் அதிபர் பலி

உளுந்தூர்பேட்டை, ஜூன் 2: லாரி மீது கார் மோதிய விபத்தில் ரியல் எஸ்டேட் அதிபர் உயிரிழந்தார். அரியலூர் மாவட்டம் செந்துறையை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் மகன் சிவகுமார்(55). ரியல் எஸ்டேட் அதிபரான இவர், கடந்து சில நாட்களுக்கு முன் சென்னைக்கு சென்று விட்டு அங்கிருந்து மற்றொரு ரியல் எஸ்டேட் அதிபரான தஞ்சாவூர் மாவட்டம் அம்மன்பேட்டையை சேர்ந்த அந்தோணிசாமி மகன் பீட்டர் பிரான்சிஸ் (54), அவரது மகன் நவீன் (23) ஆகியோருடன் ஒரு காரில் சென்னையில் இருந்து அரியலூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

இந்த கார் நேற்று காலை கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அடுத்த ஷேக்உசேன்பேட்டை அருகில் சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் முற்றிலும் நசுங்கி சேதம் அடைந்ததுடன் காரில் சென்ற சிவகுமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், பீட்டர் பிரான்சிஸ், அவரது மகன் நவீன் ஆகிய இருவரும் படுகாயம் அடைந்து உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து எடைக்கல் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

அலங்காநல்லூர் அருகே மண் சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சமயநல்லூர் அருகே சரக்கு வேன் மோதி வாலிபர் பலி

விபத்தின்றி பணியாற்றிய டிரைவருக்கு தங்க பதக்கம்