லாரி டிரைவர், இளம்பெண் மாயம்

தர்மபுரி, செப்.23: தொப்பூர் அருகே உள்ள பாகலஅள்ளியைச் சேர்ந்தவர் பழனி. இவரது மகன் கார்த்தி(32), லாரி டிரைவர். இவருக்கு ஸ்ரீதேவி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கடந்த வாரம் வேலைக்கு செல்வதாக கூறிச்சென்ற கார்த்தி, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும், அவரை பற்றி தகவல் இல்லை. இதுகுறித்து ஸ்ரீதேவி தொப்பூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல், பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த மெணசியைச் சேர்ந்தவர் ஜீவா. இவரது மனைவி கோகிலா(29). கடந்த 20ம் தேதி வீட்டில் இருந்து கடைக்கு சென்ற கோகிலா, மீண்டும் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்காததால், அவரது தந்தை பாப்பிரெட்டிப்பட்டி போலீசில் புகார் அளித்தார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கோகிலாவை தேடி வருகின்றனர்.

Related posts

வெளிநாட்டில் வேலை வள்ளியூர் பிரமுகரிடம் ரூ.10 லட்சம் மோசடி: கேரள முதியவர் கைது

சுரண்டை அரசு கல்லூரியில் சேர விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்

ஒன்றிய தொழிலாளர் அமைச்சகம் மூலம் பீடித் தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை ஆணையர் தகவல்